நிறுவனம் பற்றி
வெலிபெலின் உயர்ந்த வலிமை
எங்களை பற்றி
வெலிபெல் ஃபைனான்ஸ் என்பது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான,பெறுமதிக்கேற்ற நிதி தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் ஒரு நிறுவனமாகும். 18 வருட காலப்பகுதியில் வெற்றிகரமான வணிக நடவடிக்கைகளின் மைல்கல்லை எட்டியிருக்கும் நிறுவனத்தின் வளர்ந்து வரும் சிறப்பானது, எங்கள் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கும் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களால் எங்கள் மீது வைக்கப்பட்டுள்ள மிகுந்த நம்பிக்கைக்கும் சான்றாகும்.
வெலிபெல் ஃபைனான்ஸ், கடந்த 18 ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சி சாதித்த மற்றும் எல்லா காலங்களிலும் சாதனை புரிந்த நிறுவனமாக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. மிகவும் சவாலான மற்றும் அச்சுறுத்தலான காலகட்டத்தில் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டிலும் குறைபாடற்ற செயல்திறனை பதிவு செய்ய முடிந்ததால், தொழில்துறையில் ஒரு முக்கிய நிதி நிறுவனமாக உள்ளது. இது நமது குறிப்பிடத்தக்க பணியாளர்களின் திறன், நமது வலிமை, நமது அர்ப்பணிப்பு, நம்மை மேம்படுத்துவதற்கான நமது நிலையான தேவை மற்றும் நமது உயர் செயல்திறன் உத்திகளை செயல்படுத்துவதற்கான ஒரு சான்றாகும்.
நிறுவனத்தின் பரந்த அளவிலான மற்றும் புதுமையான நிதித் தீர்வுகள் இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு சமூக உறுப்பினர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இலங்கையின் மேற்கு, மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் 85 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் 1,600 பேர் கொண்ட அர்ப்பணமான மற்றும் விசுவாசமான ஊழியர் குழு உயர் சேவை மட்டங்களில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய பயிற்சியளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள அதேசமயம் தயாரிப்பு தரம் மற்றும் தொழில்முறைச் சிறப்பை உறுதிப்படுத்துகின்றனர்.
பல ஆண்டுகளாக, தன்னிறைவு முயற்சியாளர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை, சிறிய வணிகங்கள் முதல் தொழில்முனைவோர் குடும்பங்கள் வரையிலான வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாகவும் திருப்திகரமாகவும் சேவைகளை வழங்கி வருகிறோம். நாங்கள் வளர்ச்சியடையும் போதே, புதுமையான தயாரிப்புகள் மற்றும் புதிய தயாரிப்பு வகைகளை வழங்கி, சிறப்பு சந்தை பிரிவுகளின் நிதி தேவைகளுக்கு உதவும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.
வலுவான நிதி முகாமைத்துவம் மற்றும் மூலோபாய திட்டமிடலுக்கான அங்கீகாரமாக, வெலிபெல் ஃபைனான்ஸ் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் லங்கா தரமதிப்பீட்டு நிறுவனத்திடமிருந்து A- (நிலையான) கடன் மதிப்பீட்டைப் பெற்றது. இது நிறுவனத்தின் சரியான வணிக நடைமுறைகளுக்கு வலுவான சான்றாகும். மேலும், வெலிபெல் ஃபைனான்ஸ் ஆனது 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சிறந்த நிதி நிறுவனமாக – Sri Lanka Global Economics விருதுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். சவால்களுக்கு மத்தியில் நிறுவனத்தின் சிறப்பைப் பின்தொடர்வதற்கு இது ஒரு சான்றாக நிற்கிறது. இந்த விருது நிறுவனம் புதிய மைல்கற்களை அடைய சக்திவாய்ந்த உத்வேகமாகவும் செயல்படுகிறது.
கொழும்பு பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள வெலிபெல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அதிநவீன நிறுவன அலுவலகம் வானளாவிய தோற்றத்தில் ஒரு கலங்கரை விளக்கமாக பிரகாசித்து அதன் சிறப்பம்சங்கள் மற்றும் புதுமைகளுக்கான அசைக்க முடியாத பொறுப்பை பிரதிபலிக்கிறது. இந்த அதிநவீன அலுவலக வளாகம், நாட்டில் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதால், வெலிபெல் ஃபைனான்ஸின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக நிதிச் சேவைத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு சின்னமாக அமைந்துள்ளது.
தூரநோக்கு
நம் நாட்டின் நிதி நிலைமையை மாற்ற; ஒரு தேசிய மறுமலர்ச்சியின் பங்குதாரர்களாக ஆவதற்கு பல இடங்களில் உள்ள அதிகமான மக்களைக் கொண்டு வருதல். உதவி தேவைப்படும் நபர்களைத் தேடும் இடைவிடாத ஆர்வத்தால் நாங்கள் இயக்கப்படுகிறோம்.
நோக்கக் கூற்று
எங்கள் பணி நெறிமுறைகள், மக்களின் நாடித் துடிப்பைப் புரிந்து கொள்ளும் நிதி தயாரிப்புகளை உருவாக்கி வழங்குவதற்காக அளவில்லா உழைப்புடன் செயல்படுவதை உள்ளடக்கியது. நிதி மேலாண்மையில் பொறுப்புணர்வையும், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் நமது நாட்டின் மீது கொண்ட கடமைகளிலும் பொறுப்புடன் செயல்படுவதையும் உள்ளடக்கி, நாம் மேற்கொள்ளும் அனைத்திலும் சிறப்பை அடைவதே எமது தொடர்ச்சியான தேடலாகும்







